சென்னையில் சுக்ர பகவான் ஸ்தலம்

      ருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் மிக மிக அவசியம் மகிழ்ச்சிக்கும், திருப்திகரமான திருமண உறவுக்கும் சுக்கிரனின் பங்கு அதிகம், ஒரு மனிதனுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் இருந்தால்தான் அவன் பூமியில் சொகுசான வாழ்க்கையை வாழமுடியும். நமக்கு அழகை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கிரகம் இதுதான். அதிர்ஸ்டம் வழங்குவதும் இக்கிரகத்தின் ஒரு தன்மையே. சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைவார் அவ்வாறு அமைப்பு பெற்ற ஜாதகர்கள், சுக்கர தசை நடப்பில் உள்ளவர்கள், J,P,V போன்ற எழுத்துக்கள் நடப்பு எழுத்தாக உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து அதிர்ஸ்டம் பெறலாம்.
இத்தலத்தின் இருப்பிடம் :
        இத்திருத்தலம் மாங்காட்டில் உள்ளது. குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் மாங்காடு அமைந்துள்ளது.
இறைவனின் திருப்பெயர் :
         வெள்ளீ சுவரர்
ஆலயதரிசன நேரம் :
        காலை 6 மணிமுதல் 1 மணிவரை
        மாலை 4.30 முதல் 9 மணிவரை
தலவரலாறு :
         வாமன அவதாரத்தில் மஹாபலி சக்கரவர்த்தி தன் யாசம் நிறைவுபெற தானம் கொடுக்கும் போது, மஹாவிஸ்னு தானம் பெற வேண்டி வந்திருந்த சமயம் சுக்கிராச்சாரியர் வேண்டாம் தானம் செய்யக் கூடாது என தடுத்தார். இருந்தும் தானம் கொடுக்க முன்வருகிறார் மஹாபலி. எனவே அத்தானத்தை தடுக்கும் பொருட்டு கமண்டலத்தின் துவாரத்தை வண்டு உருவில் சுக்கிராச்சாரியார் அடைகிறார். அப்பொழுது மஹாவிஸ்னு கமண்டலத்தின் துவாரத்தில் தர்பை புல்லினால் குத்தும்போது சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழக்கிறார். சுக்கிராச்சாரியார் பூலோகத்துக்கு சென்று மாங்காடு எனும் இடத்தில் இறைவனை நோக்கி தவமிருக்கிறார். அவரின் கடுந்தவத்திற்க இறங்கி இறைவன் மீண்டும் கண் பார்வையை வழங்குகிறார். சுக்கிராச்சாரியாரின் வேண்டுகோலுக்கிணங்கி இங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்கு வெள்ளீசுவரர் என பெயர் பெற்று அருள்பாலிக்கிறார். எனவே இத்தலம் சுக்கிரனுக்கு பரிகாரத்தலமாக விளங்குகிறது.
சுக்கிர துதி :
         “சுக்கிர மூர்த்தி சுபமிகத் ஈவாய் வக்கிர மின்றி வரமிகத்
          தருவாய் வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே அள்ளிக் 
          கொடுப்பாய் அடியார்க் கருளே”