சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கிரகம் இதுதான். நமக்கு புத்தி சாதுர்யம், வாக்குத்திறமை, படிப்பறிவு, வியாபாரத்திறமை போன்றவற்றை வழங்குவது இக்கிரகம்தான். புத்திக்குறைவு உள்ளவர்கள், நரம்பு பிரச்சனை உள்ளவர்கள், படிப்பில் ஆர்வம் இல்லாத குழந்தைகள் ஆகியோர் புத பகவானுக்கு நிச்சயம் பரிகாரம் பண்ண வேண்டும். மீனத்தில் புதன் இருந்து நீச்சம் பெற்ற ஜாதகர்கள், புதன் பாவக் கிரகங்களோடு சம்ந்தப்பட்டவர்கள், புதன் தசை நடப்பவர்கள் பெயரில் நடப்பு எழுத்து E,N,W போன்ற எழுத்து கொண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து கொண்டால் நன்மையடையலாம்.
இத்தலத்தின் இருப்பிடம் :
இத்தலம் கோவூர் பஸ்நிறுத்தத்திற்கு அருகில் அமைந்துள்ளது. குன்றத்தூர்ரிலிருந்து போரூர் செல்லும் சாலையில் கோவூர் அமைந்துள்ளது.
இறைவனின் திருப்பெயர் :
சுந்தரே சுவரர்
தரிசனநேரம் :
காலை 6 முதல் 11.30 வரை
மாலை 6 முதல் 9 வரை
தலவரலாறு :
இக்கோயில் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. செந்தமிழ் நாட்டின் 1008 சிவாலயங்களில் தொன்மை வாய்ந்ததும், சேக்கிழார் பெருமான் மற்றும் தியாகராஜரால் பாடல் பெற்றதுமான இத்தலம் மிகச்சிறப்புடையது. அன்னை காமாட்சி மாங்காடு தலத்தில் செய்த கடுந்தவத்தின் காரணமாக மூவுலகிலும் வெப்பம் தோன்றி துன்பம் தந்த நேரத்தில், மகாலட்சுமி காமதேனுவாக இவ்வூரில் தங்கிதேவர்களுக்கு குளிர்ந்த நிழல் தந்தமையால் இவ்வூர் கோ+ஊர்=கோவூர் என ஆயிற்று இத்தலத்தின் விருட்சம் மஹா வில்வம் !
புதன் துதி :
“இதமுற வாழ இன்னல்கள் நீக்கு புத பகவானே பொன்னடி
போற்றி பேர்தந் தாள்வாய் பண்ணெளியானே உதவியே யருளும்
உத்தமா போற்றி
