ஜாதகத்தில் குருவின் இருப்பிடத்தைப் பார்ப்பது போலவே சனியின் இருப்பிடமும் ஜோதிடர்களால் நன்கு கவனிக்கப்படும் ஏனெனில் மானுட ஜென்மம் செய்யும் பாவங்கள், தவறுகள் போன்றவற்றுக்கு தண்டனை கொடுத்து மானுடத்தை நல் வழிப்படுத்தும் பொறுப்பு இக்கிரகத்துக்கு இறைவன் வழங்கி உள்ளார். கொஞ்சம் கடுமையான நீதிபதிதான் இக்கிரகம். எனவே மனிதன் பொதுவாக இக்கிரகத்தின் பாதிப்பால் துன்பம் அடைவான். எனவே பொதுவான நோய்கள் பாதித்தவர்கள், சனிதசை நடப்பவர்கள், சனி நீச்சம் பெற்றவர்கள், ஏழரைச் சனி நடப்பவர்கள், பெயரில் நடப்பு எழுத்து C,H,L,Q ஆகியவை நடப்பில் உள்ளவர்கள் இத்தலம் சென்று பரிகாரம் செய்வது நலம்.
தலத்தின் இருப்பிடம் :
இத்தலம் பொழிச்சலூரில் உள்ளது. பல்லாவரத்திற்கும், பம்மலுக்கும் இடையில் இவ்வூர் உள்ளது.
இறைவனின் திருப்பெயர் :
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்
ஆலய தரிசன நேரம் :
காலை - 6 மணிமுதல் 11.30 வரை
மாலை - 4 மணிமுதல் 8 மணிவரை
ஸ்தல சிறப்புகள் :
மூலவர் சந்நிதியானையின் பின்பகுதி போன்ற அமைப்பில் கட்டப்பட்டது. இந்த சன்னதியில் நிற்கும்போது மெல்ல மெல்ல மனம் உள்முகமாகி தியானம் செய்வது போன்ற மன அமைதியையும், மிகழ்ச்சியையும் அனுபவிக்கலாம். சனீஸ்வரபகவானே இங்குள்ள சிவனை பூஜித்து, திரு நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன் தோசத்தை நீக்கீ, தனி சன்னதியோடு அருள் பாலிக்கிறார். சனிப் பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெறும். திரு நள்ளாறு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தோச நிவர்த்தியடையலாம்.
சனி பகவான் துதி :
“சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம்
பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி
சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தாதா”